Wednesday, July 8, 2009

தமிழ் விகிபீடியாவின் நேர்மையின்மை

த.வீ. ரொம்ப கோல்மால்களில் ஈடுபடுகிறது.

The charges can be classified in different categories:

1. removal of grantha letters e.g.a) ஷட்ஜம், சட்ஜம் b) ஆலிஸின் அற்புத உலகம்,ஆலிசின் அற்புத உலகம். There are thousands of examples like this.

2. changing from ordinary used name (in English) to Tamil e.g.செல்ப் செக்கவுட், தான்னியக்கி பணம்செலுத்தி ஆல்கரிதம்,படிமுறைத் தீர்வு.

2A. Same as 2 in the case of personal names எஸ். எஸ். வாசன், சு. சீனிவாசன்

3. changes of people's names i.e. dropping caste names at the end.Official names of persons should be used, not Wiki Admins prejudices e.g.இ. பத்மநாப ஐயர், இ. பத்மநாபன் வ. வே. சு. ஐயர், வ. வே. சுப்பிரமணியம்

4. Introducing characters not used in Tamil பஹ்ரேய்ன், பஃரேய்ன் Admin Selva has his 'alternatives' to grantha characters and this is HIS OWN, not recognised by anybody. So, wherever possible he introduces them in place of Grantha characters. The above is an example of that.

5. Changing from commonly used words to what admins think is 'pure Tamil'e.g.

யுத்தங்கள் பட்டியல், போர்களின் பட்டியல்

ஆராய்ச்சியும் விருத்தியும், ஆய்வும் விருத்தியும்

ரொட்டி, வெதுப்பி

டோஸ்ட்மாஸ்டர் க்ளப், டோஸ்ட்மாஸ்டர் பன்னாட்டுச் சங்கம் :))) ROFL

6.Grammatical forms not used in ordinary language ரொட்டி, உரொட்டி(nobody calls or writes உரொட்டி). Even ரஷ்யா can be left as it is, but Tamil Wiki admins insist it should be changed to உருச்சியா

7. Admins have a special animosity to many commonly used words - which they argue is Sanskrit origin which must be written in 'Pure Tamil'. .நாத்திகம் is replcaed with இறைமறுப்பு These are just from headings - in artilce body there are tens of thousands of changes.


There are many other categories under which the Admins policy of imposing their prejudices which is at variance from commonly used Tamil i.e. Tamil in media, contemporary literary works, etc.


All of these can be proved by google searches within a few seconds. Admins have no business to plunder the work of writers to impose their ideology. There are many other headings wherein their plunder of other peoples work can be seen.

Wikipedia defines very clearly what kinட்s of words can be used. For example Wikipedia Manual of Style (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style) lays down, under General principles, Follow the sources

"Many points of usage, such as the treatment of proper names, can be decided by seeing what other writers do about the problem. Unless there is some clear reason to do otherwise, it is generally a good idea to follow the usage of reliable secondary sources in English (or Tamil) on the subject; the sources for the article itself should be reliable. If the sources for the article can be shown to be unrepresentative of current English (Tamil) usage as a whole, follow current English (Tamil) usage instead—and consult more sources."

The focus of the entire Wiki usage of words is "current usage" of Tamil as in well-known books, literature, Tamil media, TN govt. language and so on. Tamil Wiki admins sabotage the spirit and laid down recommeddations of the Wikipedia in pressing their own தனித் தமிழ் usage by changing other people's articles and making changes in them to confirm to their own prejudices. Tamil Wiki adminnistrators are parasitic exploitators of Tamil wiki writers to propogate their prejudices.Tamil Wikipedia,under the control of these parasites and exploiters, will achieve nothing.

ஜிஞ்ஜர்

போட்ட போடுகள் 3

டோண்டுவின் பதிவில்
https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=5677601956523465888

Ginger said...
தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் கட்டுரை எழுத வேண்டும், இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்ற வேண்டும். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை `சுத்த` தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள் இந்த புல்லுரிவு கொள்கையைத்தான் தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக `இஸ்லாம்` என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர். மு.க.ஸ்டாலின் பெயரையும், இசுட்டாலின் என மாற்றினர். ஆனால் இதற்கு நீண்ட சர்ச்சைகளுக்கு பின் ஸ்டாலின் என மாற்றப் பட்டது. இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்திகளையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது.எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுரு்வி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.அதனால் கட்டுரைகள் பொதுவாக `சப்` என்று உள்ளன. அதற்கு மேல் எவ்வளவோ தகவல், இணப்பு, இலக்கண குறைபாடுகள். ஆங்கில விக்கியோட, தமிழ் விக்கியை கம்பேர் செய்தால், தமிழர்களுக்கு தெரிந்த சப்ஜெக்டான ` காமராசர் வாழ்க்கை, அல்லது ராஜாஜி அல்லது அண்ணாதுரை வாழ்க்கை, பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த புல்லுருவி தலிபான்களினால் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சியின்றி , ஒரு dwarf ஆக உள்ளது
June 14, 2009 8:18 PM
Ginger said...
பிராபகரன்/மதிவதனி கடத்தல் கல்யாணம் பற்றி குழலி பொய் என ஒதுக்கி விட்டார். மதிவதனி கடத்தல் நிஜம். ஆனால் அதனால் நேரடியாக கல்யாணம் நடக்கவில்லை. மதிவதனியின் கடத்தல் பிரபாகரன் கல்யாணம் நிமித்தம் இல்லை.இலங்கை பத்திரிக்கையாளர், தற்போது கனடா வாசி டி.பி.எஸ்.ஜயராஜ் சமீபத்தில் பிரபாகரனின் வாழ்க்கையை பற்றி சுவாரசியமாக எழுதியுள்ளார்.http://dbsjeyaraj.com/dbsj/archives/650Cupid or “Manmathan” struck Prabhakaran with his arrows in 1983-84.Some displaced undergraduates were on a death fast at the Jaffna university premises in 1983 september. When the condition of some girls deteriorated the LTTE broke the fast and abducted those fasting. They were brought to Tamil Nadu.At one stage four of the abducted girls stayed at the residence of Anton and Adele Balasingham and used to accompany them to the LTTE office in Indranagar. The fairest and prettiest of them all was Madhivadhani Erambu. Her father Erambu was a schoolmaster from Pungudutheevu in Jaffna.During the Indian “Holi” festival people spray coloured powder and coloured water on each other. Madhivadhani held a bet with her friends and boldly drenched Prabhakaran with turmeric dissolved water. Praba was furious and berated her. Madhi started sobbing. Hours later when the tiger supremo was leaving the office , he found her in a corner weeping.He went up to her and spoke softly asking her not to cry. Madhivathani looked up at him with tear-filled eyes. Praba’s heart was piercedThereafter Prabhakaran began visiting the Balasingham’s frequently. He brought flowers and sweets for Madhi. Prabhakaran had been a shy, introverted person and had never mingled with girls outside his family. This was a new experience. Anton Balasingham encouraged the romance. They married in 1984.ChildrenThere was a hitch. The LTTE code of conduct tabooed marriage. So the top commanders were summoned to Tamil Nadu and a Central committee meeting convened. There a new regulation was introduced enabling those with five years experience to marry. The Madhi-Praba marriage took place in a temple with senior tiger commanders including KP in attendance.They had three children. The eldest was named Charles Anthony born in 1985. He was named after Praba’s best friend and military commander Charles Anthony alias Seelan who died in Meesalai, Chavakachcheri. The next was Duvaraga the daughter born in 1986. She was named after a favourite bodyguard Mayooran whose real name was Duvaaragan. The third was a son born in 1997. He was named Balachandran after Madhivathani’s own brother who also joined the LTTE and died in combat.
June 14, 2009 8:32 PM

Ginger said...
வஜ்ரா, easier said than done. தமிழ்விகி நிர்வாகத்தினரே இந்த குழு தான். அவர்களை பொருத்த வரை `நல்ல தமிழ்` கிரந்தமற்ற, வடமொழி கலப்பற்ற `தூய தமிழ்` அதனால் அவர்கள் அந்த கொள்கையை மும்மரமாக செய்து கொண்டுள்ளனர். உதாரணமாக, ஜெர்மன் ஒரு பெயரில் கட்டுரை இருதது. ஜெ மேல் வெறுப்பினால், அதை இடாயுச்சு என மாற்றினர். நீங்கள் தமிழ் கூகிளில் போட்டால், ஜெர்மன் என்றுதான் தமிழ்நாட்டில் தெரியும். ஆனால் அந்த குழு மனதில் ஜெ வரக்கூடாது. இதை ஆங்கிலத்தில் `cutting one's own nose to spite somebody' என சொல்வர். அதுதான் தமிழ்விகி. இன்னொரு உதாரணம் எசுப்பானியம். இது என்ன என்று நீங்கள் தலையை குடைந்து கொண்டிருந்தால், இது ஸ்பானிஷ். மறுபடியும், தமிழ் ஊடகங்களிலும், மற்ற தமிழர்களும் ஸ்பானிஷ் என்று தான் சொல்லுவ்வர்கள். ஆனால் `cutting one's own nose to spite somebody' கொள்கை படி, அது எசுப்பானியம் ஆகிவிட்டது. மற்றவர்கள் கட்டுரை எழுதணும், தலிபான் குழு `சலவை` செய்யும்

Ginger said...
ஜெர்மனி, ஜெர்மன் மொழி என தலைப்புகளை வைத்திருக்குலாம். ஜெ மேது காழ்ப்பால், ஜெர்மனி, யெர்மனி, செர்மனி, என்று பல இடஙக்ளில் மாற்ற்ப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியின் கதி, செர்மன் மொழி இல்லை, ஆனால் இடாயுச்சு. ஆயிரக்கண்க்கான இடங்களில் எழுத்து வேண்டலிசம் நடக்குது. உதாரண்மாக இந்த நாடு பெயர்கள் மாற்றப் பட்டுள்ளனசெருமனிஐசுலாந்துசுவீடன்லீக்டன்ஸ்டைன்இதெல்லாம் ஒரு மைக்ரோ சாம்பிள். நிர்வாகிகள் ஒரு ”சலவை பட்டாளத்தை” நியமித்துள்ளனர் போலுள்ளது, அதன் முக்கிய வேலை இந்த வேண்டலிசம். இது தமிழ் விகியின் Obsessive-compulsive Disorder. சிலர் திருப்பி திருப்பி கை அலம்புவது போல

ஜிஞ்ஜர்

Anonymous said...
simulation,Don't expect consistancy from Talibans.அதே சமயம் , தலிபானின் inconsistancy அவர்களுக்கு உபயோகமாகத்தான் இருக்கும். ஏனெனெல், யாராவது கேட்டால், அவரக்ள் நோக்கத்தை கைகழுவுவதற்கு யூஸ்புல் ஆக இருக்கும். மேலும் 100% கன்ஸிஸ்டன்சியாக கிரந்த எழுத்துகளை எடுத்தால் ஒருவரும் அந்த பக்கம் செல்ல மாட்டார்கள். அதனால், ஒரளவு கிரந்தம் மக்களை இழுப்பதற்கு. கிரந்த அழிப்பு தங்கள் தினவுகளை சொறிவதற்கு.

Thursday, May 7, 2009

போட்ட போடுகள் 2

http://truetamilans.blogspot.com/2009/05/blog-post_05.html
Ginger said...
இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.இந்த முட்டாள் நெடுமாறனுக்கு, புலிகலின் ராணுவ தோல்விதான் பெரிசாக இருக்கு. இன அழிவு 5 மாதங்களுக்கு முன்னாடியே ஏற்பட்டுவிட்டது. இந்த போராட்டமெல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் முயற்சியாகும். நெடுமாறன் போன்ற முட்டாள்கல் எப்பொழுதாவது புலிகளிடம் அப்பாவி மக்களை பிணையாக வைத்து ஆடாதீர்கள் என்று சொல்ல தைரியமோ, அறிவோ இருக்கா?? இல்லையே. நெடுமாறன் போன்ர புலி ஆதரவாளர்கள் தான் இன துரோகிகள். புலி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் வரை அழிவை தடுக்க முடியாது.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Tuesday, May 05, 2009 2:49:00 PM'))
செவ்வாய், மே 05, 2009 மதியம் 2:49:00

=================================
Ginger said...
உத’முதல் விஷயமே அங்கேயிருக்கும் அப்பாவி தமிழ் மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான்..’உ.த., அப்பாவி மக்களை காக்க வேண்டும் என்றால் புலிகள் கைதியாக வைத்துக் கொண்டிருக்கும் மக்களை போக விட வேண்டும்; அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள். ஈழவர் ந.சுசீந்திரனின் நேர்காணலை படிக்கhttp://www.satiyakadatasi.com/2009/05/01/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/”இப்படி சொல்வது மக்களை மாயைக்குள் நிறுத்திவைக்க இவர்கள் திட்டமிட்டு செய்கிற பிரச்சாரம் தான். வெறும் 1500 கேடர்களை மட்டுமே-அதுவும் எப்படா தப்பி வெளியேற முடியும் என்ற மனநிலையில் இருக்கிற இளைஞர்களை - வைத்துக்கொண்டு வெளியே பரந்திருக்கிற புலிகள் மீதான அனுதாபத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அதன் பலாபலன்களை அனு பவிக்கவும் திட்டமிட்டே இப்படியான மாயைக்குள் வைத் துள்ளனர்.இலங்கைப்பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாதாரண மனிதனுக்கு, அங்கே எவ்வளவு மக்கள் அடைபட்டிருக்கிறார்கள், எவ்வளவு புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் பரப்பளவு எவ்வளவு, மக்கள் ஆதரவு எப்படியிருக்கு என்ற விசயங்கள் மிகத்துல் லியமாகத் தெரியும்....நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.............இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது ‘இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்’ என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். ‘உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்’ என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது...........இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.................”உண்மைத்தமிழரே, இந்த தமிழர்களை புலிகளிடமிடமிருந்து விடுவிப்பதற்க்கு, உங்கள் திட்டம் என்ன? சொல்லுங்கள்ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 3:14:00 PM'))
புதன், மே 06, 2009 மதியம் 3:14:00

================================================
Ginger said...
”கூடவே அடுத்து புலிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து ஈழ நாட்டுப் பிரிவினைக்காக பேச வேண்டும் என்று விரும்புகிறோம். இலங்கை இதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் எமது நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போ என்றுதான் சொல்கிறோம்.”உத, நீங்க இன்னும் 1981ல் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன 28 வருடமாக தூங்கின Rip Van Winkle போல் பேசுகிறீர்கள். இது உருப்படுகிறதுக்கு வழி இல்லை. You are totally out of touch with reality .ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 9:56:00 PM'))
புதன், மே 06, 2009 இரவு 9:56:00

=====================
Ginger said...
உண்மைத்தமிழன்ஈழத்தைப் பற்றி பேசி, ஸ்ரீலங்கா பிரிவினையை பற்றி பேசி நீங்கள் உங்கள் காரியத்தையே கெடுத்துக் கொள்வீர்கள். முதலில் இலங்கை தமிழர்களுக்கு மேலும் நப்பாசையை ஊக்குவிக்கிறீர்கள்; இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அண்டை நாட்டு பிரிவினையை பற்றி பேசுவது பொறுப்பற்றது. தரையில் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பற்றி பேசும் உரிமை இல்லை. ஈழத்தைப் பற்றி பேசினால் உங்களால் இலங்கை அரசின் உடன் பேச்சு வார்த்தைகளுக்கு சாத்தியம் இல்லவே இல்லை. இலங்கை அரசுடன் பேசாவிட்டால் வரும் நாட்களில் இன்னும் பல தமிழர் சாவர். பொறுப்பற்ற பேச்சுகளால், தமிழர்களை இன்னும் இன்னலுக்கு ஆளாக்குவீர்கள்.Independent Eelam was a lost cause in 1989; it is even more a lost cause now. The best you can hope for is decent rehabilitation of displaced Tamils and fair treatment by Srilankan government. And stop giving false hopes to Elam Tamils by talking about breaking up of Srilanka.BTW, I asked you about your plans for bringing out thousands of Tamils - who are literally dying by being in the warzone - from the clutches of LTTE. What is your reply? If you are sincere about helping Srilankan Tamils, start with them.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Thursday, May 07, 2009 1:25:00 PM'))
வியாழன், மே 07, 2009 மதியம் 1:25:00

===================================

போட்ட போடுகள் 1

http://truetamilans.blogspot.com/2009/05/blog-post.html
Ginger said...
இலங்கை பிரச்சினை 60 வருடங்களாக எரிகிரது; 1983 முதல் கொழுந்து விட்டெரிகிரது. 83 முதலே தமிழ்நாட்டில் தமிழீழத்துற்க்கு சார்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளன. ‘இன உணர்வை’ சினிமா காரர்கள் புகட்டவே வேண்டாம். ஏர்கெனவே நிரைய இருக்கு. 30 வருடங்களாக நடத்திய நூற்றுக் கணக்கான போராட்டங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகள் முதலியவை சாதிக்காததை, எப்படி சினிமா கூட்டம் சாதிக்க போகிறது. அப்படி 30 வருட போரட்டங்கள், ஒன்றும் சாதிக்காவிட்டால், நம் தவறுகள் என்ன என்று யாரும் அலசினதாக காணோம். தமிழர்கள் 30 வருட வரலாற்றிலிருந்து, தங்கள் அனுபவங்களிடமிரிந்து ஒன்றும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஈழப்போர் ஸ்ரீலங்க அரசுக்கும், புலிகளுக்கு இடையே நடக்கின்றது. (மற்ற ஈழப் போராளிகள் புலிகளீனால் அழிக்கப் பட்டுள்ளார்கள்). இதில் ஓரளவுக்கு மேல் வெளீநாடவர்கள் - இந்தியர்களையும் சேர்த்து- ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் முன்னணியில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் தோல்வியும், அழிவும் ஏர்பட்டுள்ளது. புலிகள் சீக்கிரம் ஒழிந்தால் தான் தமிழர்கள் வேறு திசைகளில் போராட்டத்தை நடத்த முடியும். புலிகள் முன்னணியில் தமிழர்கள் தோல்வி மேல் தோல்விதான் போடுவார்கள். ஜிஞ்ஜர்

document.write(tamilize('Monday, May 04, 2009 5:44:00 PM'))
திங்கள், மே 04, 2009 மாலை 5:44:00

=================
Ginger said...
உ.த. சொல்றார் ”ஜிஞ்ஜர்.. புலிகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஈழப் பகுதியில் தமிழ் மக்கள் குடியேறவிடாமல் செய்து நாடற்றவர்களாக ஆக்குகின்ற நயவஞ்சகத்தை ராஜபக்சே அரசு செய்து வருகின்றது.. இது சுத்தமாக ஒரு இனத்தையே அழிப்பதற்குச் சமம்.இந்த நேரத்தில் புலிகள், ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசி நமது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம். ஒருமித்தக் குரலில் எதிர்ப்போம்.. வாருங்கள்”உ.த. இன அழிப்பு என்பது இப்போதுதான் கண்டுபிடித்தால் போல நினைக்கின்றீர்கள். அது 60 வருட சமாசாரம். கடந்த 5 மாதங்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு புலிகளின் ராணுவ தோல்வியினல் ஏற்பட்டுள்ளது. ஏன் ஈழ ஆதரவு கூட்டங்கள் பிரபாகரன் படத்தை வைக்கின்றன? ஏன் ஈழ ஆதரவு கூட்டஙகள் புலி கோடியை தூக்கிக் கொண்டு ஓடுகிரன? ஏன் வழக்கறிஞர்கள் பிரபாகரன் பிறந்த நாளை உயர்நீதி கட்டிடத்தில் ‘கொண்டாடினர்’?. தமிழ் நாட்டில் ஈழ மக்கள் அபிலாஷைகளுக்கு ஒரே காவலாளி பிரபாகரனும், புலிகளும் என்ற எண்ணத்தை பல அரசியல் கட்சிகள் முக்கியமக திராவிட கட்சிகள் ஊக்குவிக்கிறன. அது இன்னும் நடக்கின்றது. உதாரணமாக, பெரியார் திராவிடர்கள் மிலிடரி லாரிக்களை உடைக்கும் போது புலிக் கொடியை வீசினர். அதனால் நீங்கள் நினைக்கும் போல் புலிகள் எதிர்ப்பை தெரிவிப்பது வீண் இல்லை. மேலும் புலிகள் ஆதரவாளர்கள் தான் 5 மாத கொந்தளிப்பின் பின் நின்று இயக்கி உங்களைப் போல அப்பாவிகளை பேச வைக்கிரனர்.கடந்த 5 மாத புலிகளின் சமரகள தோல்விகளுக்கு முன்னாடியே, ஈழத் தமிழர்கள் பெரும் அளவில் அரசியல் சக்தியையும், உரிமைகளையும் இழந்து விட்டனர். இலங்கையில் எவ்வளவு மோசமாக தமிழ மக்கள் மக்கள் தொகையும், அரசியல் பலமும் இழந்து விட்டனர் என்பதை, இலங்கை தமிழரான டி.பி.ஸ்.ஜயராஜ் கட்டுரையில் படிங்கள்.http://dbsjeyaraj.com/dbsj/archives/113முதலில் இலங்கை தமிழர் ஜனத்தொகை 20 லட்சமாக இருந்தது. மேற்கு மாகாணங்களில் ஒரு 90% சதவீதமாகவும், கிழக்கு மாகாணங்களில் 60% சதவீதமாகவும் இருந்தது. 50 வருட சிஙக்ள பேரின வாத கொளகைகளாலும், 5 லட்சம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாய் சென்றதாலும், மற்ற 5 லட்சம் தமிழர்கள் சிங்கள் பிரதெசங்களுக்கு அகதிகளாய் சென்றதாலும், இன்னும் 1 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவம்- புலிகள் போராட்டத்தில் மாண்டதாலும் இப்போது வடகிழக்கு மாகானங்களில் தமிழர்கள் ஜனத்தொகையும், சதவீதமும், பெரிதாய் குறைந்துள்ளது. ஜயராஜ் கணக்குப் படி கிழக்கில் தமிழர் சதவீதம் 5% மேலிருக்காது போல் உள்ளது. மேற்கிலும் மிகவும் குறைந்துள்ளது. இன அரசியல் உரிமைகள் இன ஜனத்தொகையிலும், சதவீததித்லும் தான் உள்ளன. அது 5 மாதம் முன்னாடியே நடந்து விட்டது. அதற்கெல்லாம், புலிகளும், அதன் ஆதரவாளர்களும் பெரும் பொருப்பு வகிக்கிறார்கள். இப்போதும் கூட அரசியல் முட்டாள்களான திராவிட கட்சிகள் தலைமையில் புலிகள் ஆதரவுதான் நடக்கிறது. முள்ளீ வாய்க்கால் பகுதியில் புலிகள் தங்களை காப்பாற்றி கொள்ள 2 லட்சம் தமிழர்களை துப்பாக்கி முனையில் சுற்றிவைத்து, மேலும் அப்பாவி மக்கள் சாவுகளீனால் தங்களூக்கு ஆதரவு பிரசாரத்தை தேடுகிறாற்கள். என்னே இனப் பற்று. தமிழ் நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கின்றனவே, இதில் எவருக்காவது புலிகளின் மீது, அப்பாவி மக்களை போக விடுங்கள் என்ற கோரிக்கை வைக்க விவேகமோ, திராணியோ இருந்ததா. உங்களுக்கு தான் அந்த திராணி இருக்கின்றதா. ஈழ மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கோரிக்கைகள் புலிகளின் மீதும், பிரபாகரன் மீதும் வைக்க வேண்டும், அதில்லாமல் இந்திய, தமிழக அரசாங்களையும், உலகத்தையும் வசை பாடுவது இன்னும் அழிவை இழுத்துக் கொண்டு செல்வதாகும்.ஈழ மக்கள் அழிவில், பொருப்பற்ற தமிழக அரசியல் வாதிகளூக்கும் பங்கு உண்டு. அதே சிந்தனைய்ற்ற, விவேகமற்ற, பொருப்பற்ற மனப்பான்மை தான் இன்றைய ஆர்பாட்டங்ஜ்களூக்கும் காரணம்ஜிஞ்ஜர்

document.write(tamilize('Tuesday, May 05, 2009 2:20:00 PM'))
செவ்வாய், மே 05, 2009 மதியம் 2:20:00

===========================================
Ginger said...
'வெண்காட்டான் said... ginger, in this hard time ppl against LTTE are more worried about the increasing support of LTTE than tamil ppls lives. Y? so you are more worried about it. u dont care about tamils.வெண்காட்டான், இப்படி புலிகளுக்கு எதிரானவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் என சொல்லி, சொல்லியே, மற்றவர்கலை அழி தமிழர்களை அழித்து ஒன்றும் ஆக்கப் பூர்வமாக செய்யாமல் புலிகள் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். தோல்விகளிலிருந்து, ஒன்றும் கற்றுக் கொள்ளாதர்வர்கள் என்ன பிறப்பு. தமிழ்நாட்டில் 35 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் இலங்கை கொடூரங்கள் தெரியும், அபப்டி இருந்தும் ஏன் ஒன்றும் செய்யவில்லை, ஏன் செய்யமுடியவில்லை, என உங்களையே கேளுங்கள். புலிகளின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையால்தான், தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் புடுங்க முடியவில்லை. அதே ஆட்கள் போராட்டத்தின் முன்னணியில் நின்றால், ஒன்றும் செய்ய முடியது. ஏன் புலிகளை தவிர மற்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை நசுக்குவதில் ஆதாரம் கொடுக்கின்றனர், ஏன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து தப்பித்து இலங்கை அரசு ராணுவத்திடன் புகல் செய்கின்றனர் என கஷ்டமான கேள்விகளை கேட்டு சிந்தியுங்கள். தமிழகத்தில் உணர்சி கடலை ஊட்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் லாபம் அடைகிறனர். அந்த அரசியல் சூழ்ச்சிகளில், வலைகளில் விழாமல் இருப்பது, சாமன்யர்களுக்கு நன்று.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 3:33:00 AM'))
புதன், மே 06, 2009 இரவு 3:33:00

===============================================
Ginger said...
'உண்மைத் தமிழன்இப்போது கேள்வி புலிகளா தமிழ் ஈழத்து மக்களாக என்றில்லை.. ஈழத்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதுதான்..இதில் புலிகள், மக்கள் என்று நீங்கள் பிரித்துப் பார்ப்பது விடுதலையை இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு கொண்டு போய் விடும்..'உ.த., ஈழத்து விடுதலையை கேட்பது, ஈழத்து மக்களின் பொருப்பு, அவர்கள் இஷ்டம். தமிழ்நாட்டவர் ஈழத்தின் விடுதலையை ‘கேட்பது’ நடக்காத காரியம். ஏனெனில் யாரிடம் கேட்பது? சுதந்திர ஈழம் 1980ல் சாத்தியம் இல்லை. ஏனெனில் அண்டை வல்லரசான இந்தியா அண்டைநாடான ஸ்ரீலங்காவை துண்டிக்க ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஈழவர்களுக்கு கைக்கெட்டக் கூடிய மிக நல்ல விஷயம் மாநில சுயாட்சி, மேற்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு. இந்திய சமாதானப்படை உள்ளீட்டினால் ஈழவர்களுக்கு அது கிடைத்தது. அதைப் புலிகள் மறுத்து இந்தியாவுடன் சண்டை செய்து , தங்களையும் ஈழவர் எதிர்காலத்தையும் விரயம் செய்தார்கள். இந்தியாவும் இது என்ன தொந்தரவு என ஈழ விவகாரங்களிரிந்து, கை கழுவி விட்டது. இப்போது 1990 சுயாட்சி சான்ஸும் க்ளோஸ். அதற்கு பிறகு 70000 மக்கள் இறந்தனர். 10 லட்சம் மக்கள் அகதிகளாக சென்றனர். இன்றைக்கு ஈழவர் தங்கள் செல்வாக்கையும், பலத்தையும் மொத்தமாக இழந்து நிற்கின்ரனர். இனிமேல் 1990 வகை அரசியல் வாய்ப்பு வருவதும் சைக்கெட்டாததுதான். சிலர் அதிர்ஷ்டம் தன் வீட்டு கதவை தட்டி கைகொடுத்தாலும், அதை துப்பி துரத்துகிறவர். புலிகள் அப்பேர்பட்ட ஜாதி. பழைய ஈழ பிரதேசங்களில் தமிழ் மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டது. இனிமேல் ‘இன உரிமை’ கைக்கெட்டாதது. தமிழ்நாட்டில் இருந்து ஈழ சுதந்திரத்தை பற்றி பேசுவது, மடத்தனத்தின் சிகரம். 35 வருட தோல்விகள் போதாதென்று, இன்னும் 35 வருட தோல்விகளை காண்பீர்.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 2:16:00 PM'))
புதன், மே 06, 2009 மதியம் 2:16:00

=====================================
Ginger said...
வெண்காட்டான்எழுதினால் தமிழில் எழுதுக அல்லது ஆங்கிலத்தில் எழுதுக. தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் 2, 3 வார்த்தைகளுக்கு மேல் படிப்பது கஷ்டம்.“piraku enna myrukka anithu iyakkangalukkum training kuduthathu. pls makkalai muttal aaka vendam. ore poooiiyai solli sollai poiiyai unmai akka vendam. appothu illatha sri lankavin iraiyaanmai ippa mattum inthiya veliuravu kolkai vakupalarkaluku eppadi vanthatu? sila velai naan sollavathu pooiyaka irukkalam. ithai ungalal pooi endu solla mudiyuma? piriviai aatharikka vittal oru naattin puratti padaiku arms training valanguvathu sariya? appadi endal pakistan kasmir poorathakarakaluku training kodupathu sariya?வெண்காட்டான், நீங்கள் கேட்பது சரியான கேள்விகள். இந்திரா காந்தி அரசு புலிகள் மற்றும் இதர ஈழப் படைகளுக்கு புகலிடம் கொடுத்தது. ஓரளவு ஆயுத பயிர்சியும் கொடுத்த்து. ஏனெனில் பல வருடங்களுக்கு இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை எப்படி இந்திய அரசு சமாளிக்க வேண்டும் என தீர்மானமாக இல்லை. அதற்கு முன் 30 வருடங்களாக இலைங்கை தமிழர் சத்யாகிரக- அமைதி அரசியலில் ஈடுபட்டும் சிங்கள பேரினவாதத்தினால் மேலும் மேலும் உபாதை பெற்று வந்தனர். அது உலகறிந்த விஷயம். அதனால் ஓரளவு இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு செல்லம் கொடுத்து வந்தது. ஆனால் அதனால் இந்திய அரசு இலங்கையை இரண்டாக துண்டிக்க விரும்பியது என்பது செல்லாது.ஏனெனில் இலங்கை அரசு இந்தியா அரசுக்கு எதிரியாக கருதவில்லை. கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு சாதகமாக இலங்கை சட்டத்தையே மாற்றியது. புதிய ஷரத்துகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓரளவு சுயாட்சி பெற்றன. மேலும் ஒரு மக்கள் ரெஃபரெண்டம் கிழக்கு-மேற்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்வதை தீர்மானிக்கும். இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. ஏன்? இந்தியா திட்டம் படி புலிகளை தவிற மற்ற ஈழப் போராளிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த ஏற்பாட்டில் இருப்பார்கள். புலிகளுக்கொ தாங்கள்தான் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள். மேலும் இந்திய திட்டம் சுதந்திர ஈழத்தை கொடுக்க வில்லை. அதனால் இந்திய ராணுவத்துடன் மோதத் தொடங்கினர். இதை விட சிங்கள அரசுக்கு பெரிய உதவி தேவையில்லை. சிங்கள அரசு ஈழப்போராளிகளை இந்தியாவின் செல்லப் பிள்ளை என கருதியிரிந்தது. புலிகள் இந்தியாவுடன் சண்டை போட்டதால், இலங்கை அரசு புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இன்னும் போர் செய்ய தூண்டியது. இந்தியா அரசுக்கு இலங்கை அரசின் நய வஞ்சகம் தெரியாது என்பதல்ல். ஆனாலும்,உங்கள் நடுவிலே அமைதி கொடுக்கதான் வந்தேன். சண்டை செய்ய அல்ல என சொல்லி, இலங்கயிலிருந்து விலகி ஈழப் போராட்டாத்திலிருந்து கை கழுவிக் கொண்டது. ஈழ உரிமை போரட்டங்கக்கு Strategic Asset இந்தியாவின் நல்லிணக்கமும், துணையும் தான். அதை தூக்கிப் போட்டு, இலங்கை அரசோடு புலிகள் சல்லாபித்தார்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்டார்கள். இந்த தப்பு போதாதென்று ராஜீவ் காந்தியையும் (30 அப்பாவிகளுடன்) கோரமாக கொலை செய்தனர். அதனால் இந்திய அரசின் பரம எதிரித் தனத்தை சம்பாதித்தனர். இலங்கை அரசுக்கு புலிகள் போல இருக்கும் எதிரி ஒரு வரப்பிரசாதம். அதைப் போல எதிரிகளைக் கொண்டு, இலங்கை அரசுக்குக்கு நண்பர்களே வாண்டாம்.தன் பலங்களை தானே அழித்துக் கொண்டு, மற்ற தமிழர்களையும் தானே அழித்துக் கொண்டு வேறு எந்த எதிரி செயல்படுவான். (இலங்கை) பிரிவை ஆதரிக்காவிட்டால் ஏன் ஆயுத பயிர்சி இந்திய அரசாங்கம் கொடுத்தது என்பதற்கு பதில் அ.இந்திய அரசுக்கு இலங்கை பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாக இல்லை ஆ.ஓரளவு தமிழக மக்கள் உணர்சியை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது. 1987ல், இந்திய அரசு ஈழ் சுயாட்சியில் தெளிவாக இருந்தது. அதை புலிகள் இலங்கை அரசு உதவியுடன் தோல்வி அடைய செய்தனர். 1991ல், மறுபடியும் இந்திய அரசுக்கு தெளிவு இருந்தது - அதாவது இலங்கையிலிருந்து கை கழுவு. 1992(ராஜீவ் கொலைக்குப் பிறகு) ல் இருந்து மற்றொரு தெளிவு இருந்தது - புலிகளை ஒழிக்க வேண்டும். அது இது வரை தொடருகிரது.பாகிஸ்தான் - இந்தியா போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு போகாதீர்கள். வந்த சந்தர்பங்களை தூக்கி எரிந்து விட்டு , யோக்கியன் போல் மற்றவர்களை தூற்றுவது விவேகமல்ல. மேலும் சர்வ தேச உறவுகளிலும், சம்பவங்களிலும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். சந்தர்பங்களை தனக்கு சாதமாக பயன் படுத்தாவிட்டால் உலகை குறை சொல்லி பிரயோசனம் இல்லைஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 11:07:00 PM'))
புதன், மே 06, 2009 இரவு 11:07:00

==========================================
Ginger said...
வெண்காட்டன்மறுபடியும் ஓவரா தமிழை ஆங்கிலத்தில் எழுதி கஷ்டப் படித்திவிட்டீர்கள். உங்கள் மனநிலை புலிகளின் மனநிலைதான். அதாவது எல்லா விஷயத்திலும் All or nothing. மற்றவர்கள் புலிகள் திருப்தியாகும் வரை உதவிசெய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அவர்கள் துரோகிகள். துரோகிகளுக்கு புலிகள் என்ன தண்டனையும் வழங்கலாம். உலகமே புலிகளின் குறிக்கோள்களுடன் ஒத்து உழைக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் எதிரிகள், எதிரிகளுக்கு வேண்டிய தண்டனைகள் வழங்கப் படும். இந்த Self-centered, intolerant மனப்பான்மையால்தான் அவர்கள் கெட்டது - மிக உக்ரமான கட்டுப்பாடும், வீரமும் இருந்துகூட.உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் சர்வதேச நிலையை சாதகப் படுத்திதான் முன்னுக்கு வர முடியும். கடந்த 20 வருடங்களாக வெற்றி பெற்ற ஒரே ஒரு விடுதலை இயக்கம் கோசோவோ இயக்கம் தான். அவர்கள் அமெரிக்க, ஐரொப்பிய ஆதரவை வளர்து, அதன் மூலம் செர்பியா எதிராக வெற்றி பெற்றர்கள். உலகத்தின் மற்ற எல்லா விடுதலை இயக்கங்களும் தோல்விதான் அடைந்துள்ளன. புலிகளும், ஈழ விடுதலை இயக்கங்களும் மிக்க சர்வதேச ஆதரவோடு 80களில் தொடங்கினர். ஆனால் இப்போது மற்ற போராளிகளை கொன்றுவிட்டு, புலிகள் தன் முடிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உலகத்தில் ஒரு நண்பரும் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்க மாசசூசெட்ஸ் மக்களவையே ஈழ ஆதரவாக தீர்மானம் இயற்றினர்; இந்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் எல்லா நண்பர்களையும் இழந்து அழிவின் விளீம்பில் நிற்கின்ரனர் என சிந்திக்கவும் - சிந்தனை செய்வதால் உங்களுக்கு காச நோயோ, புற்று நோயோ வராது என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Thursday, May 07, 2009 4:02:00 AM'))
வியாழன், மே 07, 2009 காலை 4:02:00

=======================================